Friday, April 4, 2008

சிங்கத்தின் கர்ஜனை

சிங்கத்தின் கர்ஜனை

சிங்கத்தின் கர்ஜனை

சிவாஜியின் சங்கநாதம்
முரட்டுக்காளையின் பாய்ச்சல் - அதனால்
மூடர்கள் பலருக்கு காய்ச்சல் !

பாயும் புலியின் பார்வை
பாழும் வெயில் உனக்குப் போர்வை !
சத்தியம் பேசிட நீ வந்தாய் - மன்னா
சக்தியும் எமக்கு நீ தந்தாய் !

நெஞ்சிலே உரம் மிக கொண்டாய் - நீ
நண்பரே ஆயினும் நறுக்கென்று கேட்டாய்!
தர்மமே என்றும் உன்தாய் - என
தீமைகள் பொடிபட செய்தாய் !

நேர்மையும் நியாயமும் மட்டும்
நிச்சயம் வெல்லும் இனி என்றாய்!
துணிவென்றால் இதுவென்றே காட்டும்
தூயவா நீயே எம் வீட்டுப் பிள்ளாய் !

மடி மீது கனம் இல்லை என்று
மார் தட்டி நின்றாய் நீ இன்று !
அதர்மத்தை புதைத்திடு நீ கொன்று - ஆங்கே
ஆட்சிக்கு வரும் நாள் தான் என்று?

ஈ. ரா .

www.aakkal.blogspot.com