Saturday, November 1, 2008

ஆம்பளைங்களாடா நீங்க?


ஈழத் தமிழர் ஈரக்குலை நடுங்க வான் வழியும், வழி நெடுகும் குண்டுகளை வீசி கொலை பாதகம் செய்யும் சிங்கள அரசுக்கு, இதை விட கடுமையான ஒரு கண்டனத்தை யாராலும் பதிவு செய்ய முடியாது…..

இதை செய்த, தமிழ் பேசும் நல் தமிழரான ரஜினிகாந்த் அவர்களுக்கு உணர்வுள்ள ஒரு சராசரி தமிழனின் நன்றி…

வழ வழ எனவும் வள வளவெனவும் சம்பந்தமில்லாத கருத்துக்களை கூறி அரசியல் ஆதாயம் தேடும் பல நூறு குரல்களுக்கு மத்தியில் உயிரையும், உடைமைகளையும், மானத்தையும் இழந்த தாய்மார்களின், குழந்தைகளின் வலியை உலகெங்கும் உள்ள இரக்க மனம் கொண்ட நெஞ்சங்களுக்கு நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் ஒரே வார்த்தையில் உணர்த்திய அந்த மனிதனுக்கு என் நன்றி……

அவனுக்கு, ஆம்பல் என்றும் வவ்வல் என்றும் பாடத்தான் தெரியும் என்று நினைத்து இருந்தவர்களுக்கு, தான் ஆம்பளை சிங்கம் என்று நிரூபித்ததற்கு நன்றி….

உயிர் போகும் பிரச்சினையில் ஒரு தனி மனிதனை புகழ்வதா என்று நினைக்கிறீர்களா? இது புகழ்ச்சி அல்ல, நன்றிக் கடன்…

ஆம்.. ” ஒ ” பக்கங்களில் அல்ல ஓராயிரம் பக்கங்களில் கூட அறிவு ஜீவிகளால் தட்டி எழுப்ப முடியாத சாமான்யனின் உணர்ச்சியை ஒரு வார்த்தையில் எழுப்பிய அந்த சக்திக்குத்தான் இந்த நன்றிக் கடன்…..
இன்றைக்கு, படித்த பல பெரும், அறிவு ஜீவிகள் பல பெரும் செய்யும் மூளை சலவைகளால் குழப்பம் அடைந்த பல இலட்சம் படித்தவர்களுக்கும் அதே சமயம் என்ன முடிவு, எது சரி என்று தெரியாத சாதாரண மக்களுக்கும் ஒரு பேச்சினால் புரிய வைக்க முடியும் என்று உணர்தியதற்க்குத் தான் இந்த நன்றிப் பதிவு…

இலங்கை தமிழர்கள் என்றாலே ஏதோ சண்டைக் காரர்கள், தீவிரவாதிகள் என்று பரப்பப்பட்ட செய்திகளால் மனம் குழம்பிக் கிடந்த பல பேருக்கு, அந்த மக்களின் இனிமையையும் அன்பையும் அவர்களின் துயரத்தையும் சொல்ல வேண்டிய முறையில் சொல்லிப் புரிய வைத்ததற்காகவும் தெளிய வைத்ததற்காகவும்தான் இந்த நன்றி….

ஒரே நாளில் ஒரே பேச்சில் லட்சக் கணக்கான ஈழத் தமிழர்களுக்கும், கோடிக்கணக்கான உலகத் தமிழர்களுக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்ததற்க்காகத்தான் இந்த நன்றி…..

சாமான்ய மக்களும், பெண்களும், சிறுவர்களும், முதியவர்களும் பாதிக்கப் பட்டால் அது எப்படிப் பட்ட நாடாக இருந்தாலும் அழிந்து விடும் என்று பல ராஜபக்ஷேக்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததற்கு நன்றி…

பல ஆண்டுகள் பல பலத்துடன் போரிட்டும் அழிக்க முடியா விட்டால் , உன் தோல்வியை ஒத்துக் கொண்டு, மக்களை நிம்மதியாக வாழ விடு என்று அறைகூவல் விடுத்ததற்கு இந்த நன்றி…

கொடுங்கோலால் புதைக்கப்பட்டவர்கள், விதைக்கப்படுகிறார்கள் என்று உணர்த்தியதற்கு நன்றி….

எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது என்ற உண்மையை சொல்லி, உச்ச பட்ச தொகையை அளித்து, உச்ச நட்சத்திரம் என்று நிரூபித்ததற்கு நன்றி……

நேர்மையான மனிதனே, இனி வரும் காலங்களில், உன் காந்த சக்தியை பெட்டிக்குள் பூட்டாமல், அதன் அலைகளை இது போன்ற நல்ல செயல்களில் தொடர்ந்து பரவ விட்டு, எங்களை ஆயிரமாயிரம் முறை நன்றி சொல்ல வைக்க வேண்டுமென்று கடவுளை வேண்டுகிறேன்….

அன்புடன்
ஈ ரா

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home